For Daily Alerts
Just In
ஜெயாவுக்கு ரணில் தொலைபேசியில் வாழ்த்து
சென்னை:
டான்சி வழக்கில் விடுவிக்கப்பட்டதற்கு முதல்வர் ஜெயலலிதாவிற்கு இலங்கைப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேவாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
ரணில் ஜெயலலிதாவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு தனது வாழ்த்துக்களைத் தெரிவித்ததாக தமிழக அரசுவெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பா.ஜ.கவைச் சேர்ந்த மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை இணையமைச்சர் விஜய்கோயல், ராஜ்யசபா துணைத் தலைவர் நஜ்மா ஹெப்துல்லா ஆகியோரும் ஜெயலலிதாவை தொடர்பு கொண்டுவாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.
சரத்பவாரின் ஆதரவாளரான நஜ்மா சமீபத்தில் ஜெயலலிதாவை நேரில் சந்தித்து மூன்றாவது அணி குறித்துவிவாதித்துவிட்டுப் போனது நினைவுகூறத்தக்கது.
admk vijay chennai astrology surya Ajith Pooja madhavan tamilnadu simran kiran electricity kural jeevajothi art gallery florals jothika amoga
Story first published: Tuesday, November 25, 2003, 5:30 [IST]