4 வீரப்பன் கூட்டாளிகளுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்
டெல்லி:
உங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள ஆயுள் தண்டனையை ஏன் தூக்குத் தண்டனையாக மாற்றக் கூடாது என்று கேட்டு, வீரப்பன் கூட்டாளிகள் 4 பேருக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
கடந்த 1993ம் ஆண்டு வீரப்பன் கூட்டாளிகள் வைத்த கண்ணிவெடியில் சிக்கி 21 கர்நாடக காவல் துறையினர் பலியாயினர்.
இந்த வழக்கு தொடர்பாக சைமன், ஞானப்பிரகாசம், மீசை மரியா உள்ளிட்ட 4 வீரப்பன் கூட்டாளிகளை கர்நாடக போலீஸார் கைது செய்து மைசூர் தடா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கில் 4 பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்தது தடா நீதிமன்றம்.
இதை எதிர்த்து சைமன் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார். அந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், உங்களுக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை ஏன் தூக்குத் தண்டனையாக மாற்றக் கூடாது என்று கேட்டு நான்கு பேருக்கும் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இந்த வழக்கின் அடுத்த கட்ட விசாரணை டிசம்பர் 10ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications