சப் இன்ஸ்பெக்டர்- ஏட்டையா கட்டிப் புரண்டு சண்டை!
புதுக்கோட்டை:
ஹோட்டலில் வயிறுமுட்ட சாப்பிட்ட பின், பில் பணத்தை யார் கட்டுவது என்பதில் ஏற்பட்ட தகராறில் சப்-இன்ஸ்பெக்டரும், ஏட்டையாவும் கட்டிப்புரண்டு சண்டை போட்டனர்.
புதுக்கோட்டை காவல்துறை கட்டுப்பாட்டு அறையில் சப் இன்ஸ்பெக்டராக இருப்பவர் ராமகிருஷ்ணன். அங்கு தலைமைக் காவலராக இருப்பவர் சுப்ரமணியன். இருவரும் பஸ் நிலையம் அருகே உள்ள ஹோட்டலில் சாப்பிட்டுள்ளனர்.
பின்னர் பில் பணத்தைக் கட்டி விடுமாறு சுப்ரமணியிடம், ராமகிருஷ்ணன் கூறியுள்ளார். தன்னிடம் பணம் இல்லை என்றும் நீங்களே கட்டி விடுங்கள் என்றும் சுப்ரமணி மறுத்துள்ளார். இது தொடர்பாக இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இது பின்னர் கைகலப்பாக மாறி இருவரும் கட்டிப் புரண்டு சண்டை போட்டுக் கொண்டனர்.
ஹோட்டலுக்கு சாப்பிட வந்தவர்கள் இருவரையும் கஷ்டப்பட்டு விலக்கி விட்டனர். இருவர் மீதும் துறைரீதியிலான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இருவரும் லேசாக சுதியில் இருந்ததாகவும் தெரிகிறது.












Click it and Unblock the Notifications