புதுக்கோட்டை மீனவர்கள் வேலைநிறுத்தம்
புதுக்கோட்டை:
இலங்கை கடற்படை மற்றும் மீனவர்களின் அட்டகாசத்தைத் தடுத்து நிறுத்தக் கோரி புதுக்கோட்டை மாவட்டம்ஜெகதாப்பட்டனம் மீனவர்கள் இன்று வேலைநிறுத்தம் மேற்கொண்டுள்ளனர்.
புதுக்கோட்டை மற்றும் ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்களை அடிக்கடி இலங்கை கடற்படையினரும், இலங்கைமீனவர்களும் பிடித்துச் சென்று விடுகிறார்கள். கடத்தப்பட்ட மீனவர்கள் அடித்து உதைக்கப்பட்டு, மீன்களும்,வலைகளும் பறிமுதல் செய்யப்பட்டு திருப்பி அனுப்பப்படுவது சமீப காலமாக அதிகரித்து வருகிறது.
இந் நிலையில் ஜெகதாப்பட்டனத்தைச் சேர்ந்த 26 மீனவர்களை இலங்கை கடற்படையினர் பிடித்துச் சென்றுவிட்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், இலங்கையின் அட்டகாசத்தைத் தடுத்து நிறுத்தக் கோரியும்,ஜெகதாப்பட்டனம் மீனவர்கள் இன்று மீன் பிடிக்கச் செல்லாமல் வேலைநிறுத்தம் செய்து வருகின்றனர்.
இலங்கையின் அட்டகாசம் தொடர்ந்தால், மீனவர்களை பாதுகாக்க தமிழக அரசும், மத்திய அரசும் உடனடிநடவடிக்கைகளை மேற்கொள்ளாவிட்டால் கச்சத்தீவை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என்றுமீனவர்கள் எச்சரித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications