மலேசியாவில் தூக்கு தண்டனை: 8 தமிழர்களை காக்க வாஜ்பாய்க்கு ஜெ. கோரிக்கை
சென்னை:
மரண தண்டனை விதிக்கப்பட்டு மலேசிய சிறையில் வாடும் 8 தமிழர்களை விடுவிக்க,கோலாலம்பூரில் உள்ளஇந்தியத் தூதரகம் மூலம் மத்திய அரசு முயற்சி மேற்கொள்ள வேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதா பிரதமர்வாஜ்பாய்க்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது குறித்து வாஜ்பாய்க்கு அவர் எழுதிய கடிதத்தில்,
போதை மருந்து கடத்தியதாகப் பொய் வழக்கு போடப்பட்டு 8 அப்பாவித் தமிழர்களுக்கு மரண தண்டணைவிதிக்கப்பட்டுள்ளது. இதுபோல் அயல்நாட்டு சிறைகளில் வாடும் இந்தியர்கள் குறித்த பட்டியலை வெளியுறவுத்துறை தயாரித்து, அவர்களை விடுவிக்க உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
மேலும் தமிழர்கள் அதிகளவில் வசிக்கும் மலேசியா, மாலத்தீவு மற்றும் சிங்கப்பூர் நாடுகளில் உள்ள இந்தியத்தூதரகங்களில் தமிழ் பேசத் தெரிந்த தமிழர்களை அதிகாரிகளாக நியமிக்க வேண்டும். அப்போதுதான் மொழிப்பிரச்சனை ஒரு தடையாக இல்லாமல், தமிழர்கள் தங்களது குறைகளை தூதுரக அதிகாரிகளிடம் தெரிவிக்கமுடியும்.
வெளிநாடுகளுக்கு வேலைக்கு ஆள் அனுப்பும் தனியார் டிராவல்ஸ் ஏஜென்ஸிகளின் உரிமங்களையும்உடனடியாக சோதனையிட வேண்டும் என்று ஜெயலலிதா கோரியுள்ளார்.
ஜெ. கையழுத்து போட்ட அதிமுக பிரமுகர்:
இதற்கிடையே போரூர் பஞ்சாயத்து யூனியன் அதிமுக மாணவரணி செயலாளர் எஸ். ரஹ்மான், ஜெயலலிதாவின்கையெழுத்து போல் போலியாக கையெழுத்திட்டு, கட்சித் தொண்டர்களைக் குழப்பியதாகக் கூறி, கட்சியின்அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். இதை ஜெயலலிதா வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில்தெரிவித்துள்ளார்.