மதுரை போலீசின் வித்தியாசமான சங்கடம்!
மதுரை:
கடந்த 1990ம் ஆண்டு சட்டக் கல்லூரி மாணவர்கள் மீது பதிவு செய்யப்பட்ட கிரிமினல் வழக்குகளை என்னசெய்வது என்று தெரியாமல் கையைப் பிசைந்து கொண்டு நிற்கின்றனர் மதுரை போலீசார்.
காரணம், அந்தச் சட்டக் கல்லூரி மாணவர்கள் படிப்பை முடித்து இப்போது மாஜிஸ்திரேட்டுகாகவும், அரசு தரப்புவழக்கறிஞர்களாகவும் வந்துவிட்டது தான்.
இதனால் அவர்கள் மீதான வழக்குகளை என்ன செய்வது என்று தெரியாமல் போலீஸார் குழம்பிப் போயுள்ளனர்.
மதுரை சட்டக் கல்லூரி மாணவர்களின் நடத்தையைக் கண்டித்து, பிரிண்டிங் பிரஸ் முதலாளியும், அவரதுநண்பர்களும் சுவரொட்டி ஒட்டிக் கொண்டிருந்த போது, அங்கு வந்த சட்டக் கல்லூரி மாணவர்கள் சிலர்அவர்களைத் தாக்கி, சட்டக் கல்லூரி வளாகத்தில் அடைத்து வைத்தனர்.
அப்போது சமாதானம் பேச வந்த கான்ஸ்டபிள் ஒருவரையும் அடித்து, அடைத்தனர். இது தொடர்பாக அந்தமாணவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
மதுரை 5வது குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்தபோது, குற்றம் சாட்டப்பட்ட சட்டக் கல்லூரிமாணவர்களை நீதிமன்றத்தில் ஆஜராகும்படி பலமுறை சம்மன் அனுப்பியும் யாரும் நீதிமன்றத்தில்ஆஜராகவில்லை.
இப்போது அந்த மாணவர்கள் மாஜிஸ்திரேட்டுகளாகவும் வழக்கறிஞர்களாகவும் அரசு தரப்புவழக்கறிஞர்களாகவும் உள்ள நிலையில் இந்த வழக்கை என்ன செய்வது என்று மண்டையைப் பிய்த்துக்கொண்டுள்ளனர் மதுரை போலீசார்.












Click it and Unblock the Notifications