சென்னையை வாட்டப் போகும் பயங்கர குடிநீர் பஞ்சம்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகள் அனைத்தும் வறண்டுவிட்டதால், விரைவில் ஏற்படவுள்ள பயங்கரமானகுடிநீர் பற்றாக்குறையை சமாளிக்க நெய்வேலியில் இருந்து ரயில் மற்றும் லாரிகள் மூலம் தண்ணீர் கொண்டு வரமுடிவு செய்யப்பட்டுள்ளது.

அதற்கான ஏற்பாடுகளை குடிநீர் வடிகால் வாரியம் மேற்கொண்டுள்ளது.

ஆந்திராவில் கண்டலேறு அணையிலிருந்து 3 டி.எம்.சி. நீரை மோட்டார்கள் மூலம் சென்னைக்கு பம்ப் செய்துகொள்ள அனுமதிக்குமாறு, முதல்வர் ஜெயலலிதா நேரில் வைத்த வேண்டுகோளுக்கு ஆந்திர முதல்வர் சந்திரபாபுநாயுடுவிடம் இருந்து இதுவரை பதில் வரவில்லை.

அப்படியே வழங்கினாலும், அதிகபட்சமாக 1 டி.எம்.சி நீரை மட்டுமே ஆந்திரம் தரும் என்று கூறப்படுகிறது. இதைமோட்டார் பம்ப்கள் மூலம் சென்னைக்குக் கொண்டு வர ரூ. 6 கோடி செலவாகுமாம்.

இதையடுத்து சென்னையில் ஏற்படப் போகும் பயங்கரமான குடிநீர்ப் பற்றாக்குறையை சமாளிக்க அவசர காலஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

முதல்வர் ஜெயலலிதா ஹைதராபாத்தில் இருந்து சென்னை திரும்பியவுடன் இந்த விஷயத்தில் இறுதிமுடிவெடுக்கப்படும் என அதிகாரிகள் கூறுகின்றனர்.

சென்னைக்கு குடிநீர் வழங்கும் பூண்டி, புழல் மற்றும் சோழாவரம் ஏரிகள் வறண்டு போக ஆரம்பித்துள்ளன.மூன்றிலும் சேர்த்தே மொத்தம் 285 மில்லியன் கன அடி நீர் மட்டுமே உள்ளது. இதை வைத்து அடுத்து ஒருவாரத்துக்கு மட்டுமே சென்னைக்குக் குடிநீர் வழங்க முடியும் என்று அதிர்ச்சி குண்டைப் போடுகின்றனர் நிபுணர்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+