For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அரவாணிக்கு அரசு வேலை!

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

அரவாணிகளும் (அலிகள்), சமூகத்தில் நல்ல நிலையில் வாழ்வதற்காக, பல்வேறு சலுகைகளை அளித்து வரும்தமிழக அரசு, தற்போது ஒரு படி மேலே போய், ஒரு அரவாணிக்கு அலுவலக உதவியாளர் வேலையைக்கொடுத்துள்ளது. தமிழகத்தின் முதல் அரவாணி அரசு ஊழியர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அரவாணிகளுக்கு தமிழக அரசு பல்வேறு நலத் திட்டங்களையும், மறுவாழ்வுத் திட்டங்களையும் செயல்படுத்திவருகிறது. சமீபத்தில் விழுப்புரம், வேலூர் ஆகிய மாவட்டங்களில் அரவாணிகளுக்காக தனித் தொகுப்பு வீடுகள்கட்டிக் கொடுக்கப்பட்டன.

மேலும், அரவாணிகளுக்காக சுய உதவிக் குழுக்களும் அமைக்கப்பட்டன. இது தவிர அரவாணிகள் அடங்கியசங்கங்களும் ஆரம்பிக்கப்பட்டு அவற்றின் மூலம் அரவாணிகளின் குறைகளை அறிந்து நலத் திட்டங்களைசெயல்படுத்தி வருகிறது மாநில சமூக நலத்துறை.

இந் நிலையில் இன்னும் ஒரு படி மேலே போய், அரவாணிகளுக்கு அரசு வேலை கொடுக்கவும் சமூக நலத்துறைநடவடிக்கை எடுத்துள்ளது. முதல் கட்டமாக ஒரு அரவாணிக்கு அலுவலக உதவியாளர் (பியூன்) வேலைகொடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து சமூக நலத்துறை செயலாளர் சி.கே.கயாலி கூறுகையில், பல்வேறு அரவாணிகள் சங்கங்களின்உறுப்பினர்களைச் சந்தித்தபோது, தமிழகம் முழுவதிலும் சுமார் 2000 அரவாணிகள் நன்கு படித்தும், பல்வேறுதிறமைகள் கொண்டவர்களாகவும் இருப்பது தெரியவந்தது.

இருப்பினும் இவர்களுக்கு வேலை கொடுப்பதில் பல சட்ட சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன. இதன் காரணமாகவே சுயஉதவிக் குழுக்களை அமைத்து இவர்களது தினசரி வாழ்க்கைக்கு வழி ஏற்படுத்த சமூக நலத்துறை முடிவு செய்ததுஎன்றார் அவர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X