சிறந்த பொறியியல் கல்லூரிகளுக்கு தன்னாட்சி அதிகாரம்: அண்ணா பல்கலை திட்டம்
சென்னை:
தரமான பொறியியல் கல்லூரிகளுக்குத் தன்னாட்சி அதிகாரம் (Autonomous status) வழங்க அண்ணாபல்கழைக்கழகம் முடிவு செய்துள்ளது.
தன்னாட்சி அந்தஸ்து பெற தகுதிகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. கல்லூரி ஆரம்பிக்கப்பட்டு குறைந்தது 10ஆண்டுகள் பூர்த்தியாகி இருக்க வேண்டும். தகுதி வாய்ந்த ஆசிரியர்கள், சிறந்த நிர்வாகம், உரிய உள்கட்டமைப்புவசதிகள் ஆகிய தகுதிகளின் அடிப்படையில் தன்னாட்சி அந்தஸ்து வழங்கப்படும்.
தன்னாட்சி அந்தஸ்து பெற விரும்பும் கல்லூரிகள் அண்ணா பல்கலைக்கழகத்திற்கு விண்ணப்பிக்க வேண்டும்.ஆய்வுக்குழு அந்த கல்லூரிகளை ஆய்வு செய்து அறிக்கை சமர்பிக்கும். அதன் அடிப்படையில் அரசின்ஒப்புதலுடன் தன்னாட்சி அந்தஸ்து வழங்கப்படும்.
தன்னாட்சி அந்தஸ்து தொடர்பாக அண்ணா பல்கலைக் கழகம் வகுத்துள்ள விதிமுறைகளுக்கு பல்கலைக்கழகவேந்தர் ஆளுநர் ராமமோகன் ராவ் அண்மையில் ஒப்பதல் வழங்கியுள்ளார் என்றார்.