போலி ஜாமீன் உத்தரவு: 6 பேருக்கு 5 ஆண்டு சிறை
நதிருநெல்வேலி:
சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்தது போல போலியான ஜாமீன் உத்தரவுகளைத் தயாரித்து 156 கைதிகளைவிடுதலை செய்ய முயன்ற பாளையங்கோட்டை மத்திய சிறை வார்டர் உள்ளிட்ட 6 பேருக்கு 5 ஆண்டு கடுங்காவல்சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
பாளையங்கோட்டை சிறையில் வார்டராக இருப்பவர் கோவிந்தசாமி. இவரும், ராஜன், பாபநாசம், பொன்ஆதித்தன், குருமூர்த்தி, பொன்ராஜ் ஆகியோரும் சேர்ந்து, சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த ஜாமீன் உத்தரவுபோல போலியாக தயாரித்து பாளையங்கோட்டை சிறைக்கு அனுப்பியுள்ளனர். இதன் மூலம் 156 கைதிகளைவிடுவிக்க முயன்றுள்ளனர்.
இவர்கள் அனுப்பிய ஜாமீன் உத்தரவுகள் போலியானவை என்று சிறை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.இதையடுத்து நடந்த விசாரணையில் 6 பேரும் சிக்கினர்.
இவர்கள் மீது திருநெல்வேலி தலைமை குற்றவியல் நடுவர் மன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. வழக்கைவிசாரித்த நீதிபதி 6 பேருக்கும் 5 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதித்தார்.












Click it and Unblock the Notifications