சென்னையில் பாக். உளவாளி கைது: உதவிய விமான நிலைய அதிகாரிக்கு வலைவீச்சு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

விமானம் மூலம் சென்னை வந்த பாகிஸ்தான் உளவாளிக்கு உதவிய விமான நிலைய அதிகாரி வேணுகோபால்என்பவரை போலீஸார் தேடி வருகிறார்கள்.

லுப்தான்ஸா விமானம் மூலம் அமெரிக்கா செல்வதற்காக சென்னை விமான நிலையம் வந்திறங்கிய பாகிஸ்தான்உளவாளி இலியாஸ் அகமதுவும் அவரது மனைவியும் கஸ்டம்ஸ் அதிகாரிகளிடம் பிடிபட்டனர். முறையானஇமிக்ரேசன் ஆவணங்கள் இல்லாமல் சென்னை வந்தது எப்படி என அதிகாரிகள் கேள்வி எழுப்பினர்.

அப்போது இதில் தலையிட்ட சென்னை விமான நிலைய தீயணைப்புப் படை அதிகாரியான வேணுகோபால்,இவர்களுக்கு இமிக்ரேசன் செக் முடிந்துவிட்டதாகக் கூறினார். அது தொடர்பான சீல் வைக்கப்பட்டுள்ளதையும்சுட்டிக் காட்டினார்.

சந்தேகமடைந்த கஸ்டம்ஸ் அதிகாரிகள், இமிக்ரேசன் அதிகாரிகளைத் தொடர்பு கொண்டபோது அவர்களதுஆவணங்களில் உள்ள சீல் போலியானது என்று தெரியவந்தது.

இதையடுத்து அவர்களை கைது செய்த கஸ்டம்ஸ் அதிகாரிகள் சிபிஐயிடம் ஒப்படைத்தனர். சிபிஐ விசாரணைநடத்தியபோது இலியாஸ் அகமது, மும்பையில் நடந்த குண்டுவெடிப்புச் சம்பவத்தில் தொடர்புடையவர் என்றுதெரியவந்தது.

இதையடுத்து வேணுகோபாலையும் கைது செய்ய சிபிஐ முயன்றபோது அவர் தலைமறைவாகிவிட்டார்.வேணுகோபாலுக்கு இலியாஸ் அகமது ஏராளமான பணம் கொடுத்துள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.

வேணுகோபாலை தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. வேணுகோபாலின் வீட்டில் அதிகாரிகள் சோதனைநடத்தினர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+