சென்னை கோர்ட்டில் ஆஜரான கர்நாடக முன்னாள் அமைச்சர்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
கர்நாடக மாநில முன்னாள் அமைச்சரும், சட்டசபை ஐக்கிய ஜனதாதள தலைவருமான பி.ஜி.ஆர்.சிந்தியா,அவமதிப்பு வழக்கில், சென்னை முதலாவது செஷன்ஸ் நீதிமன்றத்தில் ஆஜரானார்.
கர்நாடக முன்னாள் அமைச்சர் நாகப்பா சாவு தொடர்பாக சிந்தியா சில கருத்துக்களைத் தெரிவித்திருந்தார்.இதையடுத்து அவரது கருத்துக்கள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு அவமரியாதை சேர்க்கும் வகையில்உள்ளதாகக் கூறி சிந்தியா மீது சென்னை முதன்மை செஷன்ஸ் நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்குத் தொடர்ந்தது.
இந்த அவமதிப்பு வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது சிந்தியா நீதிபதி ஜெயபால் முன்னிலையில்ஆஜரானார். பின்னர் இந்த வழக்கை பிப்ரவரி 26ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.












Click it and Unblock the Notifications