8 தமிழர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படவில்லை: மலேசிய அமைச்சர்
சென்னை:
மலேசியாவில் தமிழகத்தைச் சேர்ந்த 8 தமிழர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுவதுதவறான தகவல். யாருக்கும் மரண தண்டனை விதிக்கப்படவில்லை என்று மலேசிய சுற்றுலாத் துறை அமைச்சர்அப்துல் காதிர் பின் ஹாஜி ஷேக் பாத்ஸிர் கூறியுள்ளார்.
சென்னை வந்திருந்த அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், தமிழகத்தின் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 8தமிழர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக இங்குள்ள பத்திரிக்கைகளில் செய்திகள் வெளியாகிவருவதாக அறிந்தேன். ஆனால் அப்படி ஒரு தண்டனை கொடுக்கப்பட்டதாக எனக்குத் தோன்றவில்லை.
அப்படி தண்டனை கொடுக்கப்பட்டிருந்தால் மலேசிய நாளிதழ்களில் முதல் பக்கத்தில் மிகப் பெரிய செய்தியாகஅது வெளியாகியிருக்கும் என்றார். அப்போது குறுக்கிட்ட மலேசிய துணைத் தூதர் ராஜா அகமது,
ராமநாதபுரத்தைச் சேர்ந்த 8 தமிழர்கள் மீது போதைப் பொருள் தொடர்பான வழக்குப் பதிவு செய்யப்பட்டுவிசாரணையில் உள்ளது. ஆனால் இதுவரை எந்தத் தண்டனையும் கொடுக்கப்படவில்லை என்று விளக்கினார்.












Click it and Unblock the Notifications