ஜனனி மீண்டும் திருச்சி சிறைக்கு மாற்றம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுப்படி, கஞ்சா வழக்கில் கைதாகியுள்ள மதுரை இளம் பெண் ஜனனி மீண்டும்திருச்சி சிறையில் அடைக்கப்பட்டார்.
கஞ்சா கடத்தியதாக கூறி ஜனனி, அவரது தாயார் ரமீஜா, கார் டிரைவர் சதீஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.இவர்களில் ஜனனி தாக்கல் செய்திருந்த ஜாமீன் மனுவை சென்னை உயர் நீதிமன்றம் சமீபத்தில் தள்ளுபடி செய்தது.
மேலும், சென்னை மயிலாப்பூர் அரசு மகளிர் காப்பகத்தில் வைக்கப்பட்டிருந்த ஜனனியை மீண்டும் திருச்சிசிறையில் அடைக்கவும் நீதிமன்றம் பணித்தது.
இந் நிலையில் வயிற்று வலி காரணமாக சென்னை அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற ஜனனி நேற்றுதிருச்சி சிறைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அங்குள்ள மகளிர் பிரிவில் அவர் அடைக்கப்பட்டார்.












Click it and Unblock the Notifications