மத்திய அமைச்சரவை மாற்றம்: திமுக எம்.பி. குப்புசாமிக்கு பதவி?
டெல்லி:
பிரதமர் வாஜ்பாய் தனது அமைச்சரவையில் மாற்றியமைக்க திட்டமிட்டுள்ளார். திமுக எம்.பியான குப்புசாமிக்குஅமைச்சர் பதவி தரப்படலாம் என்று கூறப்படுகிறது.
அதே போல மத்திய நலத்துறை இணையமைச்சராக உள்ள திமுகவைச் சேர்ந்த ராஜாவுக்கு தனி அந்தஸ்துடன்கூடிய அமைச்சர் பதவி தரப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மூன்று வட மாநிலத் தேர்தல்களில் பா.ஜ.கவுக்கு வெற்றித் தேடி தந்தவர்களில் முக்கியமானவராகக் கருதப்படும்பிரமோத் மகாஜனுக்கு மீண்டும் மந்திரி பதவி வழங்கப்படும் என்ற பேச்சு நிலவுகிறது. இந்தத் தேர்தல்பணிகளுக்காகத் தான் மகாஜனை தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் பதவியில் இருந்து வாஜ்பாய் விடுத்தார்என்பது குறிப்பிடத்தக்கது.
மறைந்த மாறனுக்குப் பதிலாக இன்னொரு திமுக எம்.பியை அமைச்சராக்கக் கோரி வரும் வாஜ்பாயின்கோரிக்கையை அக் கட்சியின் தலைவர் கருணாநிதி ஏற்றுக் கொண்டுள்ளாகவும், மூத்த திமுக எம்.பி. குப்புசாமிக்குமுக்கிய பதவி தர வாஜ்பாயிடம் கருணாநிதி பரிந்துரைத்துள்ளதாகவும் டெல்லி வட்டாரத்தில் பேச்சு நிலவுகிறது.
அதேபோல இணையமைச்சராக உள்ள ராஜாவுக்கு தனி அந்தஸ்துடன் கூடிய அமைச்சர் பதவி தரவும் வாஜ்பாய்முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
அதே நேரத்தில் இப்போது அமைச்சர்களாக உள்ள ராஜ்நாத் சிங், அருண் ஜேட்லி ஆகியோர் முறையே உத்திரப்பிரதேசம், ஒரிஸ்ஸா மாநில பாஜக தலைவர்களாக நியமிக்கப்படுவர் என்றும் பேச்சு நிலவுகிறது.












Click it and Unblock the Notifications