For Quick Alerts
For Daily Alerts
Just In
மதுரை கோர்ட்டில் மு.க.அழகிரி ஆஜர்
மதுரை:
தா.கிருட்டிணன் கொலை வழக்கில் திமுக தலைவர் கருணாநிதியின் மகன் மு.க.அழகிரி உள்ளிட்ட 13 பேரும்மதுரை 3-வது அமர்வு நீதிமன்றத்தில் ஆஜராகினர். இந்த வழக்கு விசாரணை ஜனவரி 19ம் தேதிக்குஒத்திவைக்கப்பட்டது.
தா.கி. கொலை வழக்கில் அழகிரி உள்ளிட்ட 13 பேர் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர். இவர்களில் அழகிரி நிபந்தனைஜாமீனில் வேலூரில் தங்கியுள்ளார். மற்றவர்களில் பாரக் மந்தி, இப்ராகிம் சேட் ஆகிய இருவர் மட்டும் சிறையில்உள்ளனர். ஏனையோர் ஜாமீனில் பல்வேறு ஊர்களில் தங்கியுள்ளனர்.
ஏற்கனவே 13 பேருக்கும் குற்றப்பத்திரிக்கை நகல் வழங்கப்பட்டு விட்ட நிலையில், தற்போது வழக்கு 3-வதுஅமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி ஜபருல்லா கான் முன்னிலையில் நடந்து வருகிறது.
13 பேரும் நீதிபதி முன் ஆஜராகினர். பின்னர் வழக்கை அடுத்த மாதம் 19ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதிஉத்தரவிட்டார்.
Comments
admk vijay chennai astrology surya Ajith Pooja madhavan tamilnadu simran kiran electricity kural jeevajothi art gallery florals jothika amoga
Story first published: Tuesday, December 16, 2003, 5:30 [IST]