அரசு வேலையில் சேர்ந்த அரவாணி!
Subscribe to Oneindia Tamil
சென்னை:
நாட்டிலேயே முதல் முறையாக சென்னையில் அரவாணி ஒருவர் அரசு வேலையில் சேர்ந்துள்ளார்.
சென்னை ராணி அண்ணா நகரைச் சேர்ந்தவர் பாரதி. இவர் ஒரு அரவாணி. 30 வயதாகும் அரவாணி பாரதி தனக்குஅரசு வேலை தருமாறு கோரி மனு செய்திருந்தார். இதை பரிசீலித்த தமிழக அரசு அவருக்கு சென்னை கிண்டியில்உள்ள தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு ஆணையத்தில், மாதம் ரூ. 2000 சம்பளத்துடன் அலுவலக உதவியாளராகபணி நியமனம் வழங்கியது.
அரவாணி பாரதி நேற்று பணியில் சேர்ந்தார். வருகைப் பதிவேட்டில் யைெழுத்திட்டு விட்டு அவர் பணியைத்தொடங்கினார். மற்ற ஊழியர்கள் பாரதியிடம் வித்தியாசம் காட்டாமல் பரிவுடன் தங்களை அறிகப்படுத்திக்கொண்டனர்.
அரவாணி ஒருவருக்கு அரசு வேலை கொடுக்கப்பட்டுள்ளது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications