For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இந்திக்காக வருந்தும் வாஜ்பாய்

By Staff
Google Oneindia Tamil News

டெல்லி:

சுதந்திரம் பெற்று 56 ஆண்டுகளாகியும் இந்தி மொழியை தேசிய அளவில் ஆட்சி மொழியாக்க முடியவில்லையேஎன்று வருத்தம் தெரிவித்துள்ளார் பிரதமர் வாஜ்பாய்.

‘காந்தி ஸ்மிர்தி அண்ட் தர்ஸன் சமிதி’ என்ற அமைப்பு ஏற்பாடு செய்திருந்த ‘மகாத்மா காந்தியும் தேசியஅரசியலில் இந்தி மொழியும்’ என்ற தலைப்பிலான கருத்தரங்கை இன்று வாஜ்பாய் தொடங்கி வைத்தார்.

அப்போது அவர் பேசியதாவது:

இன்னும் நாம் இந்தி மொழிக்கு அதற்குரிய அங்கீகாரத்தை வழங்க முடியவில்லை என்பது மறுக்க முடியாதஉண்மை. எதனால் இவ்வாறு நேர்ந்தது? இந்தி மொழியின் இந்த நிலைக்கு என்ன காரணம்? ஏன் இந்தி மொழிக்குஉரிய இடத்தை வழங்குவதில் நாம் தோற்றுப் போனோம்?

இந்தியைப் பற்றி அதிகம் பேசுகிறோம். ஆனால் இந்தியில் குறைவாகப் பேசுகிறோம். மகாத்மா காந்தி தேசவிடுதலையில் இந்தி ஒரு வலிமையான ஆயுதம் என்பதை உணர்ந்து செயல்பட்டார் என்றார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X