போலி மருத்துவக் கல்லூரி நடத்திய தாய், மகள் கைது

Subscribe to Oneindia Tamil

திண்டுக்கல்:

திண்டுக்கல்லில் போலி துணை மருத்துவக் கல்லூரியை நடத்திய தாய் மற்றும் மகளை போலீஸார் கைதுசெய்துள்ளனர்.

திண்டுக்கல்லில், தேசிய துணை மருத்துவ அறிவியல் கழகம் என்ற பெயரில் ஒரு பாரா மெடிக்கல் கல்லூரிதொடங்கப்பட்டது. இந்தக் கல்லூரியின் முதல்வராக பாத்திமா என்பவரும், அவரது தாய் தாரா என்பவர்தாளாளராகவும் செயல்பட்டனர்.

இந்தக் கல்லூரியில் திண்டுக்கல் மற்றும் கொடைக்கானலைச் சேர்ந்த 8 மாணவிகள் சேர்ந்துள்ளனர். இவர்களிடம்நன்கொடையாக ஏராளமான பணத்தைப் பெற்றுக் கொண்ட தாராவும், பாத்திமாவும் வகுப்புகளைத்தொடங்கவில்லை. மாணவிகள் வற்புறுத்தியதைத் தொடர்ந்து ஏனோதானோவென்று வகுப்புகளைநடத்தியுள்ளனர்.

இதனால் சந்தேகமடைந்த மாணவிகள் தங்களது பணத்தைத் திருப்பித் தரும்படியும், தாங்கள் கல்லூரியை விட்டுவிலகுவதாவும் கூறியுள்ளனர். ஆனால் பணத்தைத் தர மறுத்த தாரா கூடுதலாக பணம் கேட்டுள்ளார்.அதைக்கொடுக்காவிட்டால் உங்களது பள்ளிச் சான்றிதழ்களைத் தர மாட்டேன் என்றும் மிரட்டியுள்ளார்.

இதையடுத்து 8 மாணவிகளும் போலீஸில் புகார் கொடுத்தனர். புகாரையடுத்து விசாரணை நடத்திய போலீஸார்,கல்லூரிக்கு அங்கீகாரம் இல்லாததைக் கண்டுபிடித்தனர். இதையடுத்து, தாயையும்,மகளையும் கைது செய்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+