For Daily Alerts
Just In
தொடரும் இலங்கை கடற்படை அட்டகாசம்: 12 ராமேஸ்வரம் மீனவர்கள் கடத்தல்
ராமேஸ்வரம்:
ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 12 மீனவர்களை இலங்கை கடற்படை வீரர்கள் பிடித்துச் சென்றுள்ளதால் அங்கு பரபரப்புஏற்பட்டுள்ளது.
இலங்கையைச் சேர்ந்த ஏராளமான மீனவர்கள் நேற்று இரவு கடலில் மீன் பிடிக்கச் சென்றனர். இன்று காலையில்அவர்கள் திரும்பி வந்தபோது, அதில் 12 மீனவர்களை மட்டும் காணவில்லை.
3 படகுகளில் இந்த மீனவர்கள் சென்றதாகவும், இலங்கை கடற்படை வீரர்கள் மீனவர்களை பிடித்துச்சென்றுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதனால் ராமேஸ்வரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சமீப காலமாக கிட்டத்தட்ட 2 நாட்களுக்கு ஒரு முறை தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை பிடித்துச் சென்றுவிடுவது வாடிக்கையாகி வருவது குறிப்பிடத்தக்கது.
Comments
admk vijay chennai astrology surya Ajith Pooja madhavan tamilnadu simran kiran electricity kural jeevajothi art gallery florals jothika amoga
Story first published: Wednesday, December 17, 2003, 5:30 [IST]