தொடரும் இலங்கை கடற்படை அட்டகாசம்: 12 ராமேஸ்வரம் மீனவர்கள் கடத்தல்
Subscribe to Oneindia Tamil
ராமேஸ்வரம்:
ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 12 மீனவர்களை இலங்கை கடற்படை வீரர்கள் பிடித்துச் சென்றுள்ளதால் அங்கு பரபரப்புஏற்பட்டுள்ளது.
இலங்கையைச் சேர்ந்த ஏராளமான மீனவர்கள் நேற்று இரவு கடலில் மீன் பிடிக்கச் சென்றனர். இன்று காலையில்அவர்கள் திரும்பி வந்தபோது, அதில் 12 மீனவர்களை மட்டும் காணவில்லை.
3 படகுகளில் இந்த மீனவர்கள் சென்றதாகவும், இலங்கை கடற்படை வீரர்கள் மீனவர்களை பிடித்துச்சென்றுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதனால் ராமேஸ்வரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சமீப காலமாக கிட்டத்தட்ட 2 நாட்களுக்கு ஒரு முறை தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை பிடித்துச் சென்றுவிடுவது வாடிக்கையாகி வருவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications