பொடாவை ஆயுதமாக பயன்படுத்தும் தமிழக அரசு: உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம்
டெல்லி:
நக்கீரன் கோபால் தொடர்பான மனுவை உடனடியாக விசாரிக்குமாறு தமிழக அரசின் கோரிக்கை மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
பொடா சட்டம் செல்லும் என்று உச்ச நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது. இதைத் தொடர்ந்து தமிழக அரசின்வழக்கறிஞர் வைத்தியலிங்கம் இன்று காலை உச்ச நீதிமன்றத்தில் ஒரு மனுவைத் தாக்கல் செய்தார்.
அதில் பொடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள பத்திரிக்கையாளர் நக்கீரன் கோபால் வழக்கு தொடர்பானமனு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இதை உடனடியாக விசாரித்து, கோபால் மீதான விசாரணையைத்தொடங்க வகை செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்த மனுவை நீதிபதிகள் ஏ.ஆர்.லட்சுமணன், ராஜேந்திர பாபு, மாத்தூர் அடங்கிய பெஞ்ச் விசாரித்தது. பின்னர்இந்த மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
நீதிபதிகள் கூறுகையில், பொடா என்ற சட்டத்தை தனது ஆயுதமாக கொண்டு தமிழக அரசு செயல்படுவதாகத்தெரிகிறது. பொடா சட்டத்தைக் கையில் வைத்துக் கொண்டு நீதிமன்றத்தில் என்ன வேண்டுமானாலும் கேட்கலாம்என்று தமிழக அரசு நினைத்துக் கொண்டுள்ளது போலும்.
கோபால் மனு எப்போது விசாரணைக்கு வருகிறதோ அப்போதுதான் விசாரிக்கப்படும். தமிழக அரசின்அவசரத்திற்காக மனுவை விசாரிக்க முடியாது என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications