தமிழ் பாடல்களை அதிகம் பாட வேண்டும்: இசை கலைஞர்களுக்கு கருணாநிதி கோரிக்கை
சென்னை:
இசை நிகழ்ச்சிகளில் தமிழ்ப் பாடல்களை அதிகம் பாட வேண்டும், தமிழைப் பாடாமல் புரியாத மொழியில்பாடுவது அதிகரித்து விட்டது என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் சென்னையில் பொங்கு தமிழ் பன்னிசைப் பெருவிழா இன்று தொடங்கியது.திமுக தலைவர் கருணாநிதி நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார். பின்னர் அவர் பேசுகையில், இசை நிகழ்ச்சிகளில்தற்போது புரியாத மொழியில் பாடுவதுதான் அதிகமாக உள்ளது. இதனால் யாருக்கு என்ன லாபம்?
நாகஸ்வரம், தவில், புல்லாங்குழல் போன்ற இசைக் கருவிகளுக்கு மொழி தேவையில்லை. ஆனால் மொழிக்குஇசை தேவை. வாய்ப்பாட்டு போன்ற இசைக்கு மொழி தேவை. மேடைகளில் தமிழ்ப் பாடல்களை அதிகம் பாடவேண்டும். அதை ஊக்குவிக்க வேண்டும்.
இது போன்ற பன்னிசைப் பெருவிழாக்கள் இங்கோடு நின்று விடக் கூடாது. தமிழகம் முழுவதிலும் பெருமளவில்பரவலாக நடக்க வேண்டும் என்றார்.
பாமக தலைவர் டாக்டர் ராமதாஸ் நிகழ்ச்சிக்கு முன்னிலை வகித்தார்.