முதுமலை முகாம்: லாரிகளில் ஏற யானைகள் முரண்டு!
முதுமலை:
முதுமலை யானைகள் முகாம் நிறைவடைந்ததையொட்டி தெப்பக்காடு முகாமில் கலந்து கொண்ட 55 யானைகளும்தங்களது ஊர்களுக்குத் திரும்பிச் சென்றன. சில யானைகள் மட்டும் லாரிகளில் ஏற முரண்டு பிடித்தன.
முதுமலை வனவிலங்குகள் சரணாலயத்தில் உள்ள தெப்பக்காடு பகுதியில் யானைகளுக்குக் கடந்த ஒரு மாதமாகபுத்துணர்ச்சி முகாம் நடந்து வந்தது. இந்த முகாமில் 55 யானைகள் கலந்து கொண்டன.
நேற்று முன்தினத்துடன் முகாம் நிறைவடைந்தது. இதையடுத்து யானைகள் தங்களது கோவில்களுக்குத் திரும்பின.யானைகள் அனைத்தும் லாரிகளில் ஏற்றப்பட்டன. இவற்றில் 50 யானைகள் எந்தத் தொந்தரவும் தராமல்லாரிகளில் ஏறிக் கொண்டன. 5 யானைகள் மட்டும் முரண்டு பிடித்தன. பாகன்கள் மிகவும் சிரமப்பட்டுயானைகளை லாரிகளில் ஏற்றினர்.
இந்த முகாமால் யானைகளுக்குப் பெரிய அளவில் புத்துணர்ச்சி கிடைத்திருக்காது என்றும், தற்போது காட்டுவாழ்க்கைக்குப் பழகி விட்ட யானைகள் இனி கோவில்களில் கொஞ்ச நாளைக்கு முரண்டு பிடிக்கும் என்றும்பாகன்கள் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications