டாக்டர் பிரகாஷுக்கு ஜாமீன் மறுப்பு
சென்னை:
பெண்களை ஆபாசமாக படம் எடுத்து இன்டர்நெட் மூலம் விற்றும் விசிடிக்களாக விற்றும் பணம் சம்பாதித்தடாக்டர் பிரகாஷ் தாக்கல் செய்த ஜாமீன் மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
கடந்த 2001வது ஆண்டு டிசம்பர் மாதம் 24ம் தேதி டாக்டர் பிரகாஷ் கைது செய்யப்பட்டார். அவரது விவகாரம்தமிழகம் முழுவதிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சிறையில் அடைக்கப்பட்டுள்ள டாக்டர் பிரகாஷ் ஜாமீன்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு செய்திருந்தார்.
அவரது மனுவை விசாரித்த நீதிபதி கற்பகவிநாயகம், டாக்டர் பிரகாஷ் செய்துள்ள குற்றங்கள் மிகவும்கடுமையானவை. இந்த வழக்கும் மிகவும் தீவிரமானது. எனவே இந்த நேரத்தில் அவருக்கு ஜாமீன் கொடுக்கமுடியாது. அவரது மனுவை தள்ளுபடி செய்கிறேன் என்று நீதிபதி உத்தரவிட்டார்.
மேலும், இந்த வழக்கை உடனடியாக முதன்மை செஷன்ஸ் நீதிமன்றத்திற்கு மாற்றுமாறும், முதன்மை செஷன்ஸ்நீதிபதி இந்த வழக்கை விரைவு நீதிமன்றத்திற்கு மாற்றுமாறும் நீதிபதி கற்பகவிநாயகம் உத்தரவிட்டார். இந்தவழக்கை 6 வாரங்களுக்குள் விசாரித்து தீர்ப்பு வழங்குமாறு விரைவு நீதிமன்றத்திற்கும் நீதிபதி உத்தரவுபிறப்பித்தார்.
டாக்டர் பிரகாஷின் ஜாமீன் மனு நிராகரிக்கப்படுவது இது 4-வது முறையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.