மதுரை பல்கலை.யில் பயங்கர தீவிபத்து
மதுரை:
மதுரை காமராஜர் பல்கலைக்கழக வேதியியல் துறை ஆய்வகத்தில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. இதில் பலலட்சக்கணக்கான பொருட்கள் சேதமடைந்தன.
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் உள்ள வேதியியல் துறையில் இன்று காலை கேஸ் சிலிண்டர்கள்பயங்கரமாக வெடித்தன. இதில் ஆய்வகக் கட்டடமே அதிர்ந்தது. இந்த தீவிபத்தில் பல லட்சம் மதிப்புள்ளபொருட்கள் சேதமடைந்தன. கட்டடமே இடிந்து விழும் அளவுக்கு சேதம் ஏற்பட்டது.
தகவல் அறிந்ததும் தீயணைப்புப் படையினர் விரைந்து வந்து 3 மணி நேரம் கடுமையாகப் போராடி தீயைஅணைத்தனர். இந்த தீவிபத்தில் 10 ஏர் கண்டிஷனர்கள், ஆய்வக உபகரணங்கள் மற்றும் வேதிப் பொருட்கள்எரிந்து விட்டன.
சிலிண்டர்கள் பயங்கரமாக வெடித்ததால் பல்கலைக்கழக வளாகம் முழுவதிலும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.வெடிகுண்டு வெடித்தது போன்ற சப்தம் ஏற்பட்டதால் அனைத்துத் துறைகளைச் சேர்ந்தவர்களும் வெளியே ஓடிவந்தனர். இந்த விபத்தில் யாருக்கும் காயமோ, உயிர்ச் சேதமோ ஏற்படவில்லை.












Click it and Unblock the Notifications