சென்னையை வாட்டுகிறது குடிநீர் பஞ்சம்: மேலும் 500 தண்ணீர் லாரிகளை களமிறக்க முடிவு
சென்னை:
சென்னை நகரில் குடிநீர்ப் பஞ்சம் தலைவிரித்தாடத் தொடங்கிவிட்டது. இதையடுத்து கூடுதலாக 500 லாரிகளில்குடிநீர் வினியோகம் செய்ய சென்னைக் குடிநீர் வாரியம் முடிவு செய்துள்ளது.
வட கிழக்குப் பருவ மழை பொய்த்து விட்டது. அத்தோடு புயல் அதோ வருது, இதோ வருது என்று சொல்லிஇரண்டு முறையும் திசை மாறிப் போய்விட்டது. இதனால் சென்னைக்குக் கிடைத்திருக்க வேண்டிய புயல் சார்ந்தமழையும் பெய்யவில்லை.
நகருக்குக் குடிநீர் வழங்கும் புழல், செம்பரம்பாக்கம் உள்ளிட்ட முக்கிய ஏரிகளும் காயந்து போய் கிடக்கின்றன.இதனால் சென்னையின் பல பகுதிகளில் குடிநீர்ப் பஞ்சம் ஆரம்பித்துவிட்டது. வரும் கோடை காலத்தில் இந்தப்பஞ்சம் பல மடங்காகும் அபாயம் நிலவுகிறது.
தற்போது 2,500 லாரிகள் மூலம் தினசரி சுமார் 7,500 நடை குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. ஆனால்இது போதவில்லை. எனவே லாரிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மெட்ரோ வாட்டர் முடிவு செய்துள்ளது.
கூடுதலாக 500 லாரிகள் மூலம் அதாவது தினசரி 3,000 லாரிகளில் குடிநீர் வினியோகம் செய்ய மெட்ரோ வாட்டர்ஏற்பாடு செய்துள்ளது. உடனடியாக இதை அமல்படுத்தவும் அது ஏற்பாடு செய்துள்ளது.












Click it and Unblock the Notifications