ஜனனி ஜாமீன் மனு: உச்ச நீதிமன்றத்தில் நாளை விசாரணை
டெல்லி:
கஞ்சா வழக்கில் கைதாகியுள்ள மதுரை இளம் பெண் ஜனனி மற்றும் அவரது தாயார் ரமீஜா ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள ஜாமீன் மனு மீதான விசாரணை நாளை நடைபெறவுள்ளது.
கஞ்சா வைத்திருந்ததாகவும், ரூ. 1 கோடி அளவுக்கு பணம் வைத்திருந்ததாகவும் கூறி மதுரையைச் சேர்ந்தஇளம்பெண் ஜனனி, தாயார் ரமீஜா மற்றும் அவர்களது கார் டிரைவர் சதீஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.இவர்கள் மீது மதுரை போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வருகிறது.
தங்களை ஜாமீனில் விடக் கோரி 3 பேரும் தாக்கல் செய்த ஜாமீன் மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடிசெய்து விட்டது. இந் நிலையில், ஜனனி மற்றும் ரமீஜா ஆகியோரது சார்பில் உச்ச நீதிமன்றத்தில், தனித்தனியாக 3மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அவர்களது வழக்கறிஞர் கபில் சிபல் இந்த மனுக்களை தாக்கல்செய்துள்ளார்.
தங்களை ஜாமீனில் விடக் கோரியும், இந்த வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்க உத்தரவிடக் கோரியும் மற்றும் வேறுமாநிலத்திற்கு இந்த வழக்கு விசாரணையை மாற்றக் கோரியும் ஜனனியும், ரமீஜாவும் மனுக்களில் கோரியுள்ளனர்.
இந்த மனுக்கள் மீதான விசாரணை தலைமை நீதிபதி வி.என்.காரே, நீதிபதி சின்ஹா ஆகியோர் முன்னிலையில்நாளை விசாரணைக்கு வரவுள்ளது.












Click it and Unblock the Notifications