ஸ்டிரைக் செய்த அரசு ஊழியர்களுக்கு சம்பளம்: அரசு புதிய முடிவு
சென்னை:
வேலைநிறுத்தத்தில் கலந்து கொண்டு டிஸ்மிஸ் ஆகி, அது தொடர்பான வழக்கு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டஅரசு ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவது தொடர்பாக புதிய முடிவை அரசு எடுத்துள்ளது.
கடந்த ஜூலை மாதம் வேலைநிறுத்தம் செய்த அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் டிஸ்மிஸ் செய்யப்பட்டனர். பின்னர்அவர்களது வழக்கை 3 நீதிபதிகள் கொண்ட குழு விசாரித்து வந்தது.
4 மாத கால விசாரணைக்குப் பிறகு அவர்களில் பெரும்பாலானவர்களுக்கு மீண்டும் வேலை கொடுக்கப்பட்டது.ஆனால் 4 மாதமாக அவர்களுக்கு சம்பளம் வழங்கப்படவில்லை. இது தொடர்பாக அரசு ஊழியர் சங்கங்கள்அரசுக்குக் கோரிக்கை விடுத்திருந்தன.
இந் நிலையில் விசாரணை நடந்த 4 மாத காலத்திற்குரிய சம்பளத்தைக் கொடுக்க தற்போது அரசு முடிவுசெய்துள்ளது. அதன்படி,4 மாத காலத்தையும் ஈட்டிய விடுப்பு நாட்களாகக் கருதி அதற்குரிய சம்பளம்கொடுக்கப்படும் என்று அரசு முடிவு செய்துள்ளது. ஈட்டிய விடுப்பு நாட்கள் இல்லாத அரசு ஊழியர்களுக்கு மட்டும்சம்பளம் கிடைக்காது என்று அரசு தெரிவித்துள்ளது.