ஜனனி வழக்கு: மதுரை நீதிமன்றம் விசாரிக்க உச்ச நீதிமன்றம் தடை
டெல்லி
ஜனனி மீதான கஞ்சா வழக்கை விசாரிக்க மதுரை போதைப் பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்துக்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
தங்களுக்கு ஜாமீன் கோரியும், வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கோரியும், வேறு மாநிலத்தில் வைத்து இந்தவழக்கை விசாரிக்கக் கோரியும் ஜனனியும் ரமீஜாவும் உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்திருந்தனர்.
இந்த மனுக்கள் இன்று நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன், நீதிபதி ஸ்ரீகிருஷ்ணா ஆகியோர் முன்னிலையில்விசாரணைக்கு வந்தன. மனுக்களை விசாரித்த நீதிபதிகள், ஜனனி மீதான வழக்கை விசாரிக்க மதுரைநீதிமன்றத்துக்கு இடைக்காலத் தடை விதித்தனர்.
இது தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்பவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
ஜனனியின் சார்பில் பிரபல வழக்கறிஞர்கள் கபில் சிபல், கே.சுப்பிரமணியம் ஆகியோர் ஆஜராகினர்.
நடராஜனின் தோழியான மதுரையைச் சேர்ந்த ஜனனி, தாயார் ரமீஜா மற்றும் கார் டிரைவர் சதீஷ் ஆகியோர் மீதுகஞ்சா கடத்தியதாக கூறி வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
சமீபத்தில் நீதிமன்றத்தின் வெளியே நிருபர்களிடம் பேசிய ஜனனி, என் மீது பொய் கேஸ் போட்டுள்ளனர். ஒருநாள் இன்ஸ்பெக்டர் என் வீட்டுக்கு மப்டியில் வந்தார். எங்களை சத்திரப்பட்டி போலீஸ் ஸ்டேசன்ல போய் 2 நாள்உட்கார வச்சு காதால கேக்க முடியாத வார்த்தைகளால திட்டினாங்க.
இன்ஸ்பெக்டரே கஞ்சா கொண்டு வந்து வீட்டுல வச்சு என் மேலே கேஸ் போட்டார் என்றார்.
நடராஜனுக்கு நெருக்கமாக இருந்ததால் சசிகலா சொல்லியே இந்த கேஸ் போடப்பட்டுள்ளதாக அரசல் புரசலாகபேசப்பட்டு வரும் நிலையில் ஜனனி மிக விரைவிலேயே அது தொடர்பான விஷயங்களையும் ஒளிவு, மறைவின்றிபோட்டு உடைக்க வாய்ப்பிருப்பதாக அவரது தரப்பில் கூறுகின்றனர்.