சிறையிலிருந்து தப்பிய கைதி மின்வேலி தாக்கி பலி

Subscribe to Oneindia Tamil

திருநெல்வேலி:

பாளையங்கோட்டை மத்திய சிறையிலிருந்து தப்பும்போது மின்வேலி தாக்கி கீழே விழுந்து படுகாயமுற்ற கைதிமரணமடைந்தார்.

நெல்லை, பாளையங்கோட்டை மத்திய சிறையிலிருந்து சுரங்கம் அமைத்து 6 கொலை வழக்குக் கைதிகள் தப்பினர்.பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவத்தையடுத்து 3 கைதிகளை போலீஸார் வளைத்துப் பிடித்து விட்டனர்.3 பேர் மட்டும் தலைமறைவாகி விட்டனர். அவர்களைப் பிடிக்க 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தையடுத்து பாளை சிறையைச் சேர்ந்த வார்டர்கள், சிறை அதிகாரிகள் உள்ளிட்ட 14 பேர் பணிஇடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

இந் நிலையில் பிடிபட்ட 3 கைதிகளில் சிவக்குமார் என்பவர் சுவரில் ஏறி தப்ப முயன்றபோது மின்வேலி தாக்கிகீழே விழுந்து படுகாயமுற்றார். அவருக்கு பாளை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று மாலை அவர் மரணமடைந்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+