சிறையிலிருந்து தப்பிய கைதி மின்வேலி தாக்கி பலி
திருநெல்வேலி:
பாளையங்கோட்டை மத்திய சிறையிலிருந்து தப்பும்போது மின்வேலி தாக்கி கீழே விழுந்து படுகாயமுற்ற கைதிமரணமடைந்தார்.
நெல்லை, பாளையங்கோட்டை மத்திய சிறையிலிருந்து சுரங்கம் அமைத்து 6 கொலை வழக்குக் கைதிகள் தப்பினர்.பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவத்தையடுத்து 3 கைதிகளை போலீஸார் வளைத்துப் பிடித்து விட்டனர்.3 பேர் மட்டும் தலைமறைவாகி விட்டனர். அவர்களைப் பிடிக்க 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தையடுத்து பாளை சிறையைச் சேர்ந்த வார்டர்கள், சிறை அதிகாரிகள் உள்ளிட்ட 14 பேர் பணிஇடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
இந் நிலையில் பிடிபட்ட 3 கைதிகளில் சிவக்குமார் என்பவர் சுவரில் ஏறி தப்ப முயன்றபோது மின்வேலி தாக்கிகீழே விழுந்து படுகாயமுற்றார். அவருக்கு பாளை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று மாலை அவர் மரணமடைந்தார்.