புதுக்கோட்டையில் பெண்களுக்கு தனி மசூதி!
Subscribe to Oneindia Tamil
புதுக்கோட்டை:
இந்தியாவிலேயே முதல் முறையாக பெண்களுக்காக தனி மசூதி ஒன்று புதுக்கோட்டை மாவட்டம் பரம்பூர் என்றஇடத்தில் கட்டப்பட்டு வருகிறது.
இஸ்லாமிய சமூகத்தில், ஆண்களுக்கு மட்டுமே மசூதி கட்டப்படுவது வழக்கமாக உள்ளது. ஆனால் புதுக்கோட்டைமாவட்டம் பரம்பூர் என்ற ஊரில், பெண்களுக்காக தனி மசூதி கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது.
ரூ. 15 லட்சம் செலவில் உருவாகவுள்ள இந்த மசூதியை கட்டும் முடிவை, பரம்பூர் இஸ்லாமிய ஜமாத் எடுத்துள்ளது.சாயா பெண்கள் அமைப்பு என்ற முஸ்லீம் அமைப்பு மேற்கொண்ட முயற்சிகளின் விளைவாக பெண்களுக்கானதனி மசூதி உருவாகவுள்ளது.
பரம்பூர் தெற்கு முஸ்லீம் தெருவில் உருவாகவுள்ள இந்த மசூதியுடன், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கானகல்விக் கூடம் உருவாக்கப்படவுள்ளது. இந்த அமைப்புகளை உருவாக்க 11 பேர் கொண்ட குழுவையும் பரம்பூர்ஜமாத் அமைத்துள்ளது.












Click it and Unblock the Notifications