For Daily Alerts
Just In
கொலை முயற்சி: இளைய மடாதிபதிக்கு ஜாமீன்
மயிலாடுதுறை:
திருவாவடுதுறை மடாதிபதியைக் கொல்ல முயற்சித்த வழக்கில் இளைய மடாதிபதி காசி விஸ்வநாத பண்டாரசன்னிதி உட்பட 11 பேருக்கு மயிலாடுதுறை உதவி அமர்வு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.
இந்த வழக்கில் நேற்று 11 பேருக்கும் கடுங்காவல் தண்டனை விதித்து நீதிபதி பாண்டியன் தீர்ப்பளித்தார். இதில்இளைய மடாதிபதிக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனை விதித்தார். தாங்கள் ஏற்கனவே சிறையில் இருந்ததைக்குறிப்பிட்டு, தங்களுக்கு ஜாமீன் வழங்கும்படி நீதிபதியிடம் இந் நிலையில் நேற்று மாலை மனு செய்தனர்.
இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதி பாண்டியன் 11 பேருக்கும் இருநபர் ஜாமீன் வழங்கினார். இவர்கள் மேல்முறையீடு செய்வதற்கு ஏதுவாக, வரும் ஜனவரி 6ம் தேதி வரை தண்டனையை நிறுத்தி வைக்கவும் நீதிபதிஉத்தரவிட்டார்.
Comments
admk vijay chennai astrology surya Ajith Pooja madhavan tamilnadu simran kiran electricity kural jeevajothi art gallery florals jothika amoga
Story first published: Tuesday, December 23, 2003, 5:30 [IST]