திண்டுக்கல் நீதிமன்றத்திலும் நெடுமாறனுக்கு ஜாமீன்: இன்னொரு மனு மீது நாளை தீர்ப்பு
சென்னை:
சென்னை ஆலந்தூர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கில் ஜாமீன் கோரியுள்ள தமிழர் தேசிய இயக்கத்தலைவர் பழ. நெடுமாறன் மனு மீதான தீர்ப்பு நாளை கூறப்படும் என்று நீதிபதி அறிவித்தார்.
விடுதலைப் புலிகளை ஆதரித்துப் பேசியதாகக் கூறி பொடா சட்டத்தின் கீழ் நெடுமாறன் உள்ளிட்டோர் கைதுசெய்யப்பட்டனர். இதில் சென்னை உயர் நீதிமன்றம் நெடுமாறன் உள்ளிட்ட நான்கு தமிழர் தேசிய இயக்கநிர்வாகிகளை ஜாமீனில் விடுவித்தது.
இதைத் தொடர்ந்து டாக்டர் தாயப்பன் மற்றும் சுப வீரபாண்டியன் ஆகியோர் நேற்று விடுதலை செய்யப்பட்டனர்.ஆனால் நெடுமாறன் மீது சென்னை ஆலந்தூர் மற்றும் திண்டுக்கல் சார்பு நீதிமன்றங்களில் வழக்குகள் நிலுவையில்உள்ளதால் அவர் விடுவிக்கப்படவில்லை.
இந் நிலையில் நேற்று திண்டுக்கல் வழக்கில் நெடுமாறனுக்கு ஜாமீன் கிடைத்தது. ஆலந்தூர் வழக்கிலிருந்தும்ஜாமீனில் விடுதலை செய்யக் கோரி நெடுமாறனின் வழக்கறிஞர் சுந்தரபாண்டியன் மனு செய்திருந்தார்.
இந்த மனு மீது இன்று நீதிபதி ஆனந்தன் விசாரணை நடத்தினார். அப்போது அரசுத் தரப்பு வழக்கறிஞர்,நெடுமாறனை ஜாமீனில் விடுதலை செய்யக் கூடாது என்று வலியுறுத்தினார். இரு தரப்பு வாதங்களையும் கேட்டநீதிபதி, இந்த மனு மீதான தீர்ப்பை நாளை கூறுவதாக அறிவித்தார். இதனால் நெடுமாறன் விடுதலை இன்னும் ஒருநாளைக்கு தள்ளிப் போயுள்ளது.