For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சாலை பணியாளர்களுக்கு நிவாரணம்: அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

பணி நீக்கம் செய்யப்பட்ட 10,000 சாலைப் பணியாளர்களுக்கும் வரும் பொங்கலுக்குள் ஒரு மாத சம்பளத்தைஇடைக்கால நிவாரணமாக வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதிமுக ஆட்சிக்கு வந்த பிறகு கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் பணியமர்த்தப்பட்ட 10,000 நெடுஞ்சாலைப்பணியாளர்களை கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 5ம் தேதி ஒட்டுமொத்தமாக டிஸ்மிஸ் செய்தது.

இதை எதிர்த்து தமிழக அரசின் நிர்வாக நடுவர் மன்றத்தில் சாலைப் பணியாளர்கள் வழக்குத் தொடர்ந்தனர்.அத்தோடு மாநில அளவில் பல்வேறு போராட்டங்களையும் தொடர்ச்சியாக நடத்தி வந்தனர்.

நடுவர் மன்றம், அரசின் உத்தரவு செல்லும் என்று கூறி சாலைப் பணியாளர்களின் வழக்கை தள்ளுபடி செய்தது.இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில், தமிழக அரசு நெடுஞ்சாலைத் துறை சாலைப் பணியாளர்கள் சங்கம்சார்பில் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சிர்புர்கர், கண்ணதாசன் ஆகியோர் அடங்கிய பெஞ்ச், இன்னும் 3வாரத்திற்குள் (அதாவது பொங்கல் பண்டிகைக்குள்) டிஸ்மிஸ் செய்யப்பட்ட 9,728 சாலைப் பணியாளர்களுக்கும்ஒரு மாத சம்பளத்தை இடைக்கால நிவாரணமாக தமிழக அரசு வழங்க வேண்டும்.

மேலும், தமிழக அரசு அலுவலகங்களில் எங்கெல்லாம் பணியிடங்கள் உள்ளதோ அங்கெல்லாம் சாலைப்பணியாளர்களுக்கு முன்னுரிமை கொடுத்து பணியில் அமர்த்த வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X