தி.க. பொது செயலாளர் சாலை விபத்தில் மரணம்
சென்னை:
திராவிடர் கழக பொதுச் செயலாளர் துரை. சக்கரவர்த்தி சென்னை அருகே நடந்த சாலை விபத்தில் பலியானார்.
திராவிடர் கழக பொதுச் செயலாளராக சில மாதங்களுக்கு முன்பு துரை. சக்கரவர்த்தி தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்தபதவியிலிருந்த வீரமணி இளைய தலைமுறைக்கு வழி விட்டு விலகினார். அவரது நம்பிக்கைக்கு உரியசக்கரவர்த்தியை பொதுச் செயலாளராக்கினார்.
இன்று பெரியார் நினைவு நாளையொட்டி அதில் கலந்து கொள்வதற்காக தனது சொந்த ஊரான தஞ்சாவூர்மாவட்டம் அய்யம்பேட்டையிலிருந்து ஜீப் மூலம் துரை. சக்கரவர்த்தி, தி.க. துணைப் பொதுச் செயலாளர்குலசேகரன் உள்ளிட்ட 4 பேர் சென்னை வந்தனர்.
இன்று அதிகாலை சென்னை அருகே உள்ள மீனம்பாக்கம் விமான நிலைய பகுதியில் அவர்களது ஜீப் வந்தபோது,எதிரே சென்று கொண்டிருந்த டிரைலர் லாரி திடீரென்று பிரேக் போட்டு நின்றது. இதனால் துரை. சக்கரவர்த்தியின்ஜீப் தடுமாறி லாரியின் பின் சக்கரத்தில் மோதியது.
இதில் துரை. சக்கரவர்த்தி சம்பவ இடத்திலேயே இறந்தார். குலசேகரன் உள்ளிட்ட 3 பேர் படுகாயமடைந்தனர்.அனைவரும் குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
54 வயதாகும் துரை. சக்கரவர்த்திக்கு மனைவி, மகன், 3 மகள்கள் உள்ளனர். அவரது உடல் சென்னை பெரியார்திடலில் பொதுமக்கள் பார்வைக்கு இன்று பிற்பகல் வைக்கப்பட்டது. அவரது உடலுக்கு திராவிட கழகத் தலைவர்கி.வீரமணி மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
பின்னர் அவரது உடல் அய்யம்பேட்டைக்குக் கொண்டு செல்லப்பட்டது. நாளை இறுதிச் சடங்குகள்நடக்கவுள்ளதாக திராவிடர் கழகம் அறிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications