விருதுநகரில் மார்ச். 6ல் திமுக மாநாடு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
விருதுநகரில் மார்ச் 6 மற்றும் 7 ஆகிய தேதிகளில் தென் மண்டல திமுக மாநாடு நடைபெறவுள்ளது.
திமுக தலைவர் கருணாநிதி தலைமையில் தென் மண்டல மாவட்ட செயலாளர்களின் ஆலோசனைக் கூட்டம்சென்னையில் நடந்தது. இதில் ராமநாதபுரம், திருநெல்வேலி, விருதுநகர், தூத்துக்குடி, கன்னியாகுமரி, சிவகங்கைஆகிய மாவட்ட செயலாளர்கள் கலந்துகொண்டனர். மதுரை நிர்வாகிகள் யாரும் அழைக்கப்படவில்லை.
இந்தக் கூட்டத்தில் அடுத்த ஆண்டு மார்ச் 6 மற்றும் 7 ஆகிய தேதிகளில் தென் மண்டல மாநாட்டை நடத்துவதுஎன்று முடிவு செய்யப்பட்டது. மாநாடு முகப்பிற்கு அறிஞர் அண்ணா பெயரையும், மாநாடு நடக்கும் இடத்திற்குமுரசொலி மாறன் நகர் என்றும், மேடைக்கு பசும்பொன் தா.கிருட்டிணன் பெயரையும் சூட்டுவது என்றும்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.












Click it and Unblock the Notifications