கடலூரில் டி.எஸ்.பி., இன்ஸ்பெக்டர் மீது தாக்குதல்!
கடலூர்:
கடலூர் மாவட்டம் வடலூர் அருகே இரு பிரிவினருக்கு இடையே ஏற்பட்ட ஜாதி மோதலை அடக்க முயன்ற துணைகாவல் கண்காணிப்பாளர் மற்றும் ஆய்வாளர் ஆகியோர் மீது வன்முறைக் கும்பல் தாக்குதல் நடத்தியது.
வடலூர் அருகே பச்சாரம்பாளையம் என்ற கிராமம் உள்ளது. இங்கு திங்கள்கிழமை இரவு இரு பிரிவினருக்குஇடையே மோதல் ஏற்பட்டது. விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் கொடியை ஏற்றுவது தொடர்பாக இந்த மோதல்ஏற்பட்டது. இதில் ஒரு பிரிவினர் வசிக்கும் குடிசை வீடுகள் தீவைத்து எரிக்கப்பட்டன.
ஆத்திரமடைந்த அந்த சமுதாயத்தினர் 200 பேர் ஒன்றாக திரண்டனர். தகவல் அறிந்ததும் நெய்வேலி துணை காவல்கண்காணிப்பாளர் பெருமாள், வடலூர் காவல் நிலைய ஆய்வாளர் கோபால் ஆகியோர் போலீஸ் படையுடன்அங்கு விரைந்தனர்.
கும்பலைக் கலைந்து போகுமாறு சமாதானப்படுத்தினர். அப்போது தீயணைப்புப் படையினரும் விரைந்து வந்தனர்.ஆனால் குடிசைகளில் தீயை அணைக்க அவர்கள் சம்மதிக்கவில்லை. மேலும், போலீஸார் கூறுவதையும் ஏற்கமறுத்தனர்.
இந் நிலையில் திடீரென்று சிலர் காவல்துறையினர் மீது தாக்குதல் நடத்த முயன்றனர். இதில் டி.எஸ்.பி. பெருமாளும்,இன்ஸ்பெக்டர் கோபாலும் காயமடைந்தனர். உடனடியாக இருவரும் குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனைக்குக்கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.
கூடுதல் டிஜிபி வெங்கடகிருஷ்ணன், வடக்கு மண்டல ஐ.ஜி. மகேந்திரன், விழுப்புரம் டிஐஜி கந்தசாமி, கடலூர்மாவட்ட கண்காணிப்பாளர் ராஜீவ் குமார் உள்ளிட்ட அதிகாரிகள் சம்பந்தப்பட்ட கிராமத்தில் முகாமிட்டுள்ளனர்.வன்முறை பரவாமல் இருக்க பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.