ராணி மேரி கல்லூரி விவகாரம்: வழக்கு "பைசல்" ஆனது!
சென்னை:
சென்னை மெரீனா கடற்கரையோரம் உள்ள பழமையான ராணி மேரிக் கல்லூரியை இடிக்க மாட்டோம் என்று தமிழக அரசு தலைமை வழக்கறிஞர் உறுதிமொழி அளித்ததால், கல்லூரியை இடிப்பதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு பைசல் செய்யப்பட்டதாக (கைவிடப்பட்டதாக) சென்னை உயர் நீதிமன்றம் அறிவித்தது.
சென்னை மெரீனா கடற்கரையோரம் காமராஜர் சாலையில் உள்ள பழம் பெரும் ராணி மேரிக் கல்லூரியை இடித்து விட்டு அந்த இடத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்டப் போவதாக செய்திகள் பரவியதும் மாணவிகள் பெரும் போராட்டத்தில் இறங்கினர்.
மாணவிகளுக்கு ஆதரவாக அரசியல் கட்சிகளும் குரல் கொடுத்தன. இதற்காக திமுக துணைப் பொதுச் செயலாளர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட சிலர் கைதும் செய்யப்பட்டனர்.
இந் நிலையில் கல்லூரியை இடிப்பதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் ரிட் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந் நிலையில் அரசு தலைமை வழக்கறிஞர் என்.ஆர்.சந்திரன் நீதிமன்றத்தில் ஒரு மனுவைத் தாக்கல் செய்தார். அதில் ராணி மேரிக் கல்லூரியை இடிக்கும் எண்ணம் அரசிடம் இல்லை. அது இடிக்கப்பட மாட்டாது என்று உறுதியளித்திருந்தார்.
இதையடுத்து ராணி மேரிக் கல்லூரி இடிப்பு எதிர்ப்பு ரிட் மனுக்கள் அனைத்தையும் பைசல் ஆனதாக உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சுபாஷன் ரெட்டி, நீதிபதி கோவிந்தராஜன் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் அறிவித்தது.