சென்னையில் விடிய விடிய மழை
சென்னை:
சென்னை நகரின் பெரும்பாலான பகுதிகளில் விடிய விடிய லேசான மழை பெய்தது. சென்னைக்கு அருகேவங்கக்கடலில் பலவீனமான புயல் சின்னம் தொடர்ந்து மெதுவாக நகர்ந்து கொண்டிருப்பதால் இன்றும் மழைபெய்யும் என்று வானிலை ஆராய்ச்சி நிலையம் கூறியுள்ளது.
சென்னைக்கு தென் மேற்கே வங்கக் கடலில் பலவீனமான நிலையில் குறைந்த காற்றழுத்த மண்டலம்உருவாகியுள்ளது. இது மெதுவாக நகர்ந்து வருகிறது. இதனால் சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் லேசானமழை பெய்து வருகிறது.
இரவிலும், காலையிலும் மட்டுமே மழை உள்ளது. பகலில் மேகமூட்டம் மட்டும் காணப்படுகிறது. ஆங்காங்கேதூறல் காணப்படுகிறது. இந் நிலையில் நேற்று இரவு முழுவதும் லேசான மழை பெய்த வண்ணம் இருந்தது. இந்தமழை இன்றும் நீடிக்கும் என்று வானிலை ஆராய்ச்சி நிலையம் தெரிவித்தது.
இந்த மழையால் சென்னை நகர மக்களுக்கு பெரிய சந்தோஷம் எதுவும் ஏற்படப் போவதில்லை. ஏனெனில்நகருக்குக் குடிநீர் வழங்கும் ஏரிகள் உள்ள பகுதிகளில் குறிப்பிடத்தக்க அளவுக்கு மழை பெய்யவில்லை. இதனால்இந்த மழையால் சென்னை நனைந்ததே தவிர மக்களின் தாகத்தை இது தீர்க்கும் என்று கூற முடியாது என்றுவானிலை ஆராய்ச்சி நிலையம் கூறியுள்ளது.












Click it and Unblock the Notifications