மு.க.அழகிரி மதுரை செல்ல உயர் நீதிமன்றம் அனுமதி

Subscribe to Oneindia Tamil

சென்னை:

அம்மை நோயால் அவதிப்படும் மகனைப் பார்ப்பதற்காக மு.க.அழகிரி 2 நாட்களுக்கு மதுரை சென்று தங்க சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

தா.கிருட்டிணன் கொலை வழக்கு தொடர்பாக கைதான அழகிரி தற்போது நிபந்தனை ஜாமீனில் வேலூரில் தங்கியுள்ளார். சமீபத்தில் முரசொலி மாறன் இறந்தபோது, அவரது இறுதிச் சடங்கில் கலந்து கொள்வதற்காக 4 நாட்களுக்கு அவர் சென்னை செல்ல உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியது.

இந் நிலையில் மு.க.அழகிரி சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில், தனது மகன் அம்மை நோய் வந்து அவதிப்படுவதாகவும், அவரைப் பார்த்துக் கொள்ள வீட்டில் யாரும் இல்லாததால், தனது மகனைப் பார்த்துக் கொள்ள மதுரை செல்ல அனுமதிக்குமாறு அழகிரி கோரியிருந்தார்.

மனுவைப் பரிசீலித்த நீதிபதி ஏ.கே.ராஜன், அழகிரி வருகிற வெள்ளி மற்றும் சனி ஆகிய இரு நாட்களுக்கு மதுரை சென்று தங்கலாம். அதன் பின்னர் ஞாயிற்றுக் கிழமை காலை வேலூருக்குச் சென்று விட வேண்டும் என்று உத்தரவிட்டார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+