இந்திய ஹஜ் யாத்ரீகர்களின் முதல் குழு ஜெட்டாவை அடைந்தது
Subscribe to Oneindia Tamil
துபாய்:
இந்த ஆண்டுக்கான இந்திய ஹஜ் புனித யாத்ரீகர்களின் முதல் குழுவினரை சுமந்து கொண்டு ஏர் இந்தியா சிறப்பு விமானம் ஜெட்டா வந்தடைந்தது.
நேற்றிரவு வந்த இந்த விமானத்தில் 200 பேர் வந்தனர். இவர்கள் அனைவரும் ஜம்மூ- காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள்.
இந்த ஆண்டு ஜெட்டாவுக்கு வந்த முதல் ஹஜ் யாத்ரீகர்களின் விமானமும் இது தான். இந்த புனித யாத்ரீகர்களை சவுதி அரேபியாவுக்கான இந்தியத் தூதர் கமாலுதீன் அகமத் வரவேற்றார்.
இந்த ஆண்டு இந்தியாவில் இருந்து 1.15 லட்சம் பேர் ஹஜ் யாத்திரை மேற்கொள்ளவுள்ளனர். இதற்காக 254 சிறப்பு விமானங்களை இந்தியாவின் 11 விமான நிலையங்களில் இருந்து ஏர் இந்தியா இயக்கவுள்ளது.
அதே போல சவுதி அரேபியன் ஏர்லைன்ஸ் இந்தியாவில் இருந்து 114 சிறப்பு விமானங்களை இந்த ஆண்டு இயக்கவுள்ளது.












Click it and Unblock the Notifications