For Daily Alerts
Just In
தமிழக அரசின் உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் திடீர் நீக்கம்
டெல்லி:
தமிழக அரசின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் பணியாற்றி வந்த வழக்கறிஞர் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.
உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசின் சார்பில் சுப்பிரமணிய பிரசாத், ராமலிங்கம் ஆகியோர் பணியாற்றி வந்தனர். இதில் ஒருவர் கிரிமனல் வழக்குகளையும் இன்னொருவர் சிவில் வழக்குகளையும் கவனித்து வந்தனர்.
இருவரும் அதிமுக ஆட்சிக்கு வந்த பின் நியமிக்கப்பட்டவர்கள். இந் நிலையில் ராமலிங்கத்தை தமிழக அரசு திடீரென நீக்கியுள்ளது. சில மாதங்களுக்கு முன்னர் தான் இந்தப் பதவியில் இருந்த ரேவதி ராகவனை நீக்கிவிட்டு சுப்பிரமணிய பிரசாதை தமிழக அரசு நியமித்தது.
இப்போது ராமலிங்கமும் நீக்கப்பட்டுவிட்டார். அவரது பொறுப்பையும் சுப்பிரமணிய பிரசாதே கவனிப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கான உத்தரவை தமிழக உள்துறைச் செயலாளர் சையத் முனீர் ஹோதா மூலமாக அரசு வெளியிட்டுள்ளது.
admk vijay chennai astrology surya Ajith Pooja madhavan tamilnadu simran kiran electricity kural jeevajothi art gallery florals jothika amoga
Story first published: Thursday, December 25, 2003, 5:30 [IST]