For Daily Alerts
Just In
வீரப்பனை பிடிப்பது ரொம்ப ஈஸி: சி.ஆர்.பி.எப். தலைவர்!
டெல்லி:
சந்தனக் கடத்தல் வீரப்பனைப் பிடிப்பது ரொம்பவும் எளிதானது. இந்தப் பணி எங்களிடம் ஒப்படைக்கப்பட்டால் வெகு சீக்கிரமே அவனைப் பிடித்து விடுவோம் என்று மத்திய ரிசர்வ் போலீஸ் படை தலைவர் எஸ்.பி.செளத்ரி கூறினார்.
டெல்லியில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், வீரப்பனைப் பிடிக்க நாங்கள் தயார் என்று கடந்த ஆண்டு மத்திய அரசிடம் தெரிவித்திருந்தோம். ஆனால் இதுவரை அந்தப் பணி எங்களுக்குக் கொடுக்கப்படவில்லை.
வீரப்பனை விட மிகப் பெரிய சவால்களையெல்லாம் நாங்கள் சந்தித்துள்ளோம். வீரப்பன் ஒரு பிரச்சினையே இல்லை, அவனைப் பிடிப்பது மிகவும் சுலபமானது.
உலகிலேயே மிகப் பெரிய துணை ராணுவப் படையாக மத்திய ரிசர்வ் போலீஸ் படை திகழ்கிறது என்றார் அவர்.
Comments
admk vijay chennai astrology surya Ajith Pooja madhavan tamilnadu simran kiran electricity kural jeevajothi art gallery florals jothika amoga
Story first published: Thursday, December 25, 2003, 5:30 [IST]