கைதியை வரவேற்க ஆயுதங்களுடன் சென்ற 18 பேர் கைது

Subscribe to Oneindia Tamil

கடலூர்:

கொலை வழக்கில் சிறை சென்று, ஜாமீனில் விடுதலையான கைதியை வரவேற்க பயங்கர ஆயுதங்களுடன் திரண்டுசென்ற 18 பேரை போலீஸார் கைது செய்தனர். மேலும் பலர் போலீஸாரின் பிடியிலிருந்து தப்பி விட்டனர்.

பாண்டிச்சேரி அருகே உள்ள மதகடிப்பட்டு என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் குமரன். கொலை வழக்கில் கைதாகிபாண்டிச்சேரி மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

இந் நிலையில், குமரன் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். இதையடுத்து அவரை சிறப்பாக வரவேற்கும்பொருட்டு, குமரனின் சகோதரர் 20க்கும் மேற்பட்ட கார்களை வாடகைக்கு எடுத்தார். பின்னர் கார்களில் தனதுஆதரவாளர்களுடன் விழுப்புரத்திலிருந்து பாண்டிச்சேரிக்குச் சென்றார்.

சிறைக்கு அருகே செல்லாமல், பாண்டிச்சேரிக்கு அருகே உள்ள மஞ்சக்குப்பம் என்ற இடத்தில் அவர்கள்கார்களுடன் காத்திருந்தனர். 20க்கும் மேற்பட்ட கார்களில் பயங்கர ஆயுதங்களுடன் ஒரு கும்பல் காத்திருப்பதாகப்போலீஸாருக்குத் தகவல் போனது.

இதைத் தொடர்ந்து கடலூர் புதுநகர் காவல் நிலைய சப் இன்ஸ்பெக்டர் அம்பேத்கர் போலீஸாருடன் அங்குவிரைந்து சென்றார். போலீஸார் வருவதைப் பார்த்ததும் அந்தக் கும்பலைச் சேர்ந்த பலர் கார்களுடன் தப்பினர்.இருப்பினும் போலீஸான் பிடியில் 18 பேர் சிக்கினர். அவர்களிடமிருந்து பயங்கர ஆயுதங்கள் பறிமுதல்செய்யப்பட்டன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+