ரூ. 4.7 கோடி ஹெராயின் பறிமுதல்: அதிமுக புள்ளி உள்பட பலர் கைது
சென்னை:
ஹெராயின் கடத்திய முக்கிய அதிமுக பிரமுகர் ரவிசங்கர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரது கூட்டாளிகளும் கைதுசெய்யப்பட்டு அவர்களிடமிருந்து ரூ. 4.7 கோடி மதிப்புள்ள 4.7 கிலோ ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டம் விளாத்திக்குளம் சட்டசபைத் தொகுதி திமுக சார்பில் எம்.எல்.ஏ. ஆன ரவிசங்கர் தற்போதுஅதிமுகவில் உள்ளார்.
இலங்கையைச் சேர்ந்த ஒரு நபருக்கு இவர் கொடுத்த ஹெராயினுக்கு பணம் வந்து சேரவில்லை என்று தெரிகிறது.இதையடுத்து பரமகுடியில் ஒரு விடுதியில் தங்கியிருந்த அந்த நபரை ரவிசங்கர் தனது ஆட்களுடன் சேர்ந்து தாக்கி,கட்டி, காரில் போட்டு சென்னைக்குக் கொண்டு வந்தார்.
பின்னர் அவரை சென்னை மண்ணடி பகுதியில் ஒரு அறையில் அடைத்து வைத்தனர். அவர் வசம் இருந்த ரூ. 1.5கோடி மதிப்புள்ள 1.5 கிலோ ஹெராயினையும் ரவிசங்கரின் ஆட்கள் பறித்துக் கொண்டனர்.
அறையில் கட்டிப் போடப்பட்டிருந்த அந்த இலங்கை வாலிபர் ஜன்னல் வழியாக அப் பகுதியில் நடந்து சென்றஒருவருக்கு சைகை மூலம் தான் கட்டி வைக்கப்பட்டுள்ளதைத் தெரிவித்தார்.
இதைப் பார்த்த அந்த நபர் போலீசாருக்குத் தகவல் தந்தார். இதைத் தொடர்ந்து போலீசார் நேற்றிரவு அங்கு சென்றுஅந்த நபரை விடுவித்தனர். அவரிடம் விசாரணை நடத்தியபோது தான் அது ஒரு போதை பொருள் கடத்தல்கும்பல் என்று தெரியவந்தது.
இதையடுத்து போதைத் தடுப்பு போலீசாருக்குத் தகவல் தரப்பட்டது. இதையடுத்து போதைப் பொருள் தடுப்புபோலீசார் அந்த நபரிடம் விசாரணை நடத்தினர்.
அவர் கொடுத்த தகவலின் பேரில் மதுரவயலில் ஒரு லாட்ஜில் போலீஸார் சோதனை நடத்தினர்.
அங்கிருந்த வெங்கடேஷ், முன்னாள் எம்.எல்.ஏ. ரவிசங்கர், ரகு, சங்கர், அர்ஜூன் ஆகியோரையும் கைது செய்தனர்.அவர்களிடமிருந்து மேலும் 1.5 கிலோ ஹெராயின் பறிதல் ஆனது.
அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் பட்டுக்கோட்டை அருகே குருவிக்கரம்பையில் உள்ள ரகுவின் உறவினர்செந்தில் என்பவரின் வீட்டிலும் போலீசார் சோதனையிட்டனர்.
அங்கிருந்த 1.7 கிலோ ஹெராயினும் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் 5 பேரும் கைதாகினர்.
கைதான ரவிசங்கர் உள்ளிட்ட அனைவரும் இன்று போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில்ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை 15 நாள் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து மாஜிஎம்.எல்.ஏ. ரவிசங்கர் உள்ளிட்டோர் சென்னை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.