அரசு ஊழியர்கள் டிஸ்மிஸ் வழக்கு: இறுதி அறிக்கை இன்று தாக்கல்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

அரசு ஊழியர் டிஸ்மிஸ் தொடர்பான வழக்கை விசாரித்து வந்த 3 நீதிபதிகள் குழுவைச் சேர்ந்த நீதிபதி தங்கவேலுதனது இறுதி அறிக்கையை இன்று அரசிடம் கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வேலைநிறுத்தம் செய்து டிஸ்மிஸ் ஆன அரசு ஊழியர்கள் 6072 பேரின் வழக்கை விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் நீதிபதி மலை சுப்ரமணியம், நீதிபதி தங்கவேலு, நீதிபதி சம்பத் ஆகியோரைக் கொண்ட குழுவைநியமித்தது.

இந்தக் குழுவினர் விசாரணையை முடித்து முதல் கட்ட அறிக்கையை ஏற்கனவே தாக்கல் செய்தனர். அந்தஅறிக்கையில் தலைமைச் செயலகம் மற்றும் சென்னையைச் சேர்ந்த அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் குறித்த தீர்ப்புவழங்கப்பட்டிருந்தது.

அதன்படி 583 பேர் டிஸ்மிஸ் செய்யப்பட்டனர், 132 பேர் ழுமையாக மீண்டும் பணியில் சேர்க்கப்பட்டனர்,மற்றவர்களுக்கு ஊதிய உயர்வு ரத்து, பதவி இறக்கம் போன்றவை வழங்கப்பட்டன.

இந் நிலையில் பிற மாவட்ட அரசு ஊழியர்கள் தொடர்பான வழக்கை விசாரித்த நீதிபதி சம்பத், நீதிபதிமலைசுப்ரமணியம் ஆகியோர் தங்களது விசாரணை அறிக்கையை கடந்த 26ம் தேதி அரசிடம் கொடுத்தார்கள்.

3-வது நீதிபதியான தங்கவேலு மட்டும் தனது அறிக்கையை கொடுக்காமல் இருந்தார். அவரும் இன்று தனது இறுதிஅறிக்கையை கொடுத்து விடுவார் என்று கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து பிற மாவட்ட அரசு ஊழியர்கள் மீதானதீர்ப்பை தமிழக அரசு அமல்படுத்தும் என்று தெரிகிறது.

இவர்களிலும் கணிசமான அளவு ஊழியர்கள் டிஸ்மிஸ் செய்யப்பட்டு இருப்பார்கள் என்று ஊகிக்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+