புத்தாண்டுயொட்டி சென்னையில் பலத்த பாதுகாப்பு
சென்னை:
புத்தாண்டுக் கொண்ட்டாட்டத்தின்போது சென்னை நகரில் பலத்த பாதுகாப்புக்கு மாநகர காவல்துறை ஏற்பாடுசெய்துள்ளது.
2004ம் ஆண்டு பிறக்கவுள்ளதையடுத்து புத்தாண்டை வரவேற்கும் வகையில் சென்னை நகரின் முக்கிய சாலைகள்,மெரீனா கடற்கரை உள்ளிட்ட பகுதிகளில் 31ம் தேதி இரவு கொண்ட்டாட்டத்தில் ஈடுபடுவது மக்களின் வழக்கம்.
இந்த கொண்டாட்டங்களின்போது பிரச்சினை எழாமல் தடுக்கும் பொருட்டு போலீஸார் கடுமையானவிதிமுறைகளை அறிவித்துள்ளனர்.
மெரீனா கடற்கரை, எலியட்ஸ் கடற்கரை, அண்ணா சாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலை, முக்கிய ஹோட்டல்கள்,பதற்றமான பகுதிகள், கோவில்கள், பேராலயங்கள் ஆகியவற்றில் போலீஸார் அதிக அளவில்குவிக்கப்படவுள்ளனர்.
மொத்தம் 7000 போலீஸார் வரை பாதுகாப்புப் பணியில் ஈடுபடவுள்ளனர். இதுதவிர 1000 தமிழ்நாடு சிறப்புப்போலீஸ் படையினரும் ரோந்துப் பணியில் ஈடுபடுத்தப்படுவர்.
யாருக்கும் எந்தவித தொந்தரவும் தராமல் புத்தாண்டை கொண்டாட வேண்டும். பொது இடங்களில் அநாகரிகநடவடிக்கைகள் தவிர்க்கப்பட வேண்டும் என்று காவல்துறை ஆணையர் நடராஜ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
குடித்து விட்டு வண்டிகளை வேகமாக ஓட்டுவது, கோக், பெப்சி போன்ற பானங்களை பிறர் மீது ஊற்றிவிளையாடுவது, இரு சக்கர வாகனங்களில் 2 பேருக்கு மேல் அமர்ந்து செல்வது ஆகியவை கண்டிப்பாகஅனுமதிக்கப்படாது என்றும் அவர் எச்சரித்துள்ளார்.












Click it and Unblock the Notifications