பெண்ணை காதலித்து ஏமாற்றியதாக அமைச்சரின் பாதுகாப்பு அதிகாரி மீது புகார்
சென்னை:
தமிழக அமைச்சர் ஒருவரின் பாதுகாப்பு அதிகாரி, பெண்ணைக் காதலித்து கல்யாணம் செய்து கொள்ளாமல்ஏமாற்றி விட்டதாகக் கூறி அவர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். அவரைக் காதலித்த பெண்தற்கொலை செய்து கொள்ள முயற்சித்தபோது, போலீஸார் காப்பாற்றினர்.
மூத்த அமைச்சர் ஒருவருக்கு பாதுகாப்பு அதிகாரியாக இருப்பவர் சப் இன்ஸ்பெக்டர் பாலமுருகன். சென்னைசைதாப்பேட்டை அரசு ஊழியர் குடியிருப்பில் மனைவி மற்றும் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
சேலத்தைச் சேர்ந்த ஒரு பெண் வேலை தேடி அடிக்கடி தலைமைச் செயலகத்திற்கு வருவது வழக்கம். அப்போதுஅவருக்கும், பாலமுருகனுக்கும் பழக்கம் ஏற்பட்டது. இது காதலாக மாறியது, உள்ளங்களோடு உடல்களும்இணைந்தன. கல்யாணம் செய்து கொள்வதாகவும் அப் பெண்ணுக்கு பாலமுருகன் வாக்கு கொடுத்திருந்தார்.
இந் நிலையில் பாலமுருகனின் வீட்டு முகவரியை கஷ்டப்பட்டு கண்டுபிடித்தார் அப் பெண். பின்னர்சைதாப்பேட்டை அரசு ஊழியர் குடியிருப்புக்குச் சென்றார். அங்கு சென்று பார்த்தபோது, பாலமுருகன் ஏற்கனவேகல்யாணம் ஆனவர் என்று தெரிய வந்ததால் பெரும் அதிர்ச்சிக்குள்ளானார்.
இது குறித்து பாலமுருகனிடம் கேட்டபோது அவர் பதில் ஏதும் கூறவில்லை. இதனால் குழப்பமடைந்த அப் பெண்தன்னை உடனடியாகக் கல்யாணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தியுள்ளார். ஆனால் பாலமுருகன் முடியாதுஎன்று கூறி விட்டார்.
இதையடுத்து காவல்துறை உயர் அதிகாரிகளிடம் இந்தப் பிரச்சினையை அப் பெண் கொண்டு சென்றார்.அவர்களது அறிவுரைப்படி மாம்பலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அப் பெண் புகார் கொடுத்தார்.இதையடுத்து பாலமுருகன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. விரைவில் அவர் கைது செய்யப்படலாம்என்று கூறப்படுகிறது.
இதற்கிடையே, சைதாப்பேட்டை பஸ்நிலையத்தில் வைத்து பாலமுருகனின் காதலி தற்கொலைக்கு முயன்றார்.அவரை போலீஸார் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அவர் மீது தற்கொலைக்கு முயற்சி செய்ததாகப்போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.












Click it and Unblock the Notifications