3ம் தேதி கருணாநிதி- ஹர்கிஷன் சுர்ஜித் சந்திப்பு
டெல்லி:
தேசிய அளவில் பா.ஜ.கவுக்கு எதிரான கூட்டணி அமைக்கும் முயற்சிகள் தீவிரமடைந்துள்ளன.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் ஹர்கிசன் சிங் சுர்ஜித், நேற்று முன் தினம் திமுக தலைவர்கருணாநிதியுடன் தொலைபேசியில் ஆலோசனை நடத்தினார்.
இந் நிலையில் காங்கிரஸ் தலைவர் சோனியாவுடன் பேசிய அவர், இன்று உத்தரப் பிரதேச முதல்வரும் சமாஜ்வாடிகட்சியின் தலைவருமான முலாயம் சிங் யாதவைச் சந்தித்து புதிய கூட்டணி குறித்து ஆலோசனை நடத்தினார்.
இந் நிலையில் அவர் வரும் 3ம் தேதி கருணாநிதியை நேரில் சந்தித்துப் பேச சென்னை வருகிறார். அன்றையதினமே வேலூர் சிறைக்குச் சென்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோவையும் அவர் சந்தித்துப் பேசுகிறார்.
தே.ஜ. கூட்டணியில் இருந்து வெளியேறிய திமுக, மதிமுக, தேசிய மாநாட்டுக் கட்சி, ராம்விலாஸ் பாஸ்வானின்கட்சி ஆகியவற்றையும் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியையும், ஜனதா தளத்தின் ஒரு பிரிவையும் காங்கிரஸ்தலைமையிலான கூட்டணியில் கொண்டு வர சுர்ஜித் முயற்சி மேற்கொண்டுள்ளார்.
ஆனால், மாயாவதி இருந்தால் நான் இருக்க மாட்டேன் என முலாயம் கூறுவதால் இது போன்ற சிக்கல்களைப்போக்க ஒரே நேரத்தில் இரு அணிகளை உருவாக்க சுர்ஜித் திட்டமிட்டுளளார். ஒருவரோடு ஒருவர் இணைந்துபோக முடியாத பா.ஜ.க. எதிர்ப்புக் கட்சிகள் இந்த இரு அணிகளில் பிரிந்து இடம் பெறலாம் என அவர்கருதுகிறார்.
இதில் ஒரு அணிக்கு காங்கிரசும் இன்னொரு அணிக்கு இடதுசாரிக் கட்சிகளும் தலைமை வகிக்கும்.
மூன்றாவது அணி என்று ஒன்று அமைந்தால் அது பா.ஜ.கவுக்கு சாதகமாகிவிடும் என்பதால், அக் கட்சிக்கு எதிரானஅனைத்துக் கட்சிகளையும் காங்கிரஸ்- இடதுசாரிகள் தலைமையில் ஒன்றிணைப்பதில் மார்கிச்ஸ்ட் கம்யூனிஸ்ட்கட்சி தீவிரமாக இறங்கியுள்ளது.
இந் நிலையில் முலாயம் சிங் யாதவை தங்கள் பக்கம் இழுக்கும் முயற்சியில் பா.ஜ.கவும் இறங்கியுள்ளது. அவரைதேசிய ஜனநாயக முன்னணியின் ஒருங்கிணைப்பாளர் ஜார்ஜ் பெர்னாண்டசும் இன்று சந்தித்துப் பேசினார்.












Click it and Unblock the Notifications