8 மாதத்தில் சென்னைக்கு புதிய மத்திய சிறை
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னைக்கு அருகே புழல் பகுதியில் உருவாகி வரும் புதிய மத்திய சிறைச்சாலை இன்னும் 8 மாதத்தில்முழுமையடையும் என்று தமிழ்நாடு காவலர் வீட்டு வசதி வாரியத் தலைவர் நெய்ல்வால் தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் கூறுகையில்,211 ஏக்கர் நிலப்பரப்பில் ரூ. 77 கோடி மதிப்பில் புதிய மத்திய சிறைகட்டப்பட்டு வருகிறது. அதி நவீன வசதிகளுடன் கூடிய இந்த சிறை வளாகத்தில் மகளிருக்கென தனி சிறைஅமைக்கப்படுகிறது.
பாதுகாப்பு காரணங்களுக்காக தற்போதுள்ள மத்திய சிறை புழலில் கட்டப்பட்டு வரும் புதிய மத்திய சிறைக்குமாற்றப்படவுள்ளது. இன்னும் 8 மாதத்தில் புதிய மத்திய சிறை தயாராகி விடும் என்றார் அவர்.












Click it and Unblock the Notifications